நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்
உலகம்செய்திகள்

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்

Share

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்

நான்கு ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான சிறுமி ஒருத்தி, 18 வயது இளம்பெண்ணாக திரும்பிவந்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த அலிஷியா (Alicia Navarro), 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார்.

அவளை ஒன்லைனில் சந்தித்த யாரோ ஏமாற்றி, எங்கோ கொண்டு சென்றுவிட்டதாக அவளது தாயார் புகாரளிக்க, பொலிசார் அவளை தீவிரமாகத் தேடிவந்தார்கள்.

இந்நிலையில், திடீரென கனடா எல்லையிலுள்ள Montana மாகாண பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவர் நுழைந்துள்ளார். தான்தான் காணாமல் போன அலிஷியா என அவர் கூற, பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளர்கள்.

ஒரு பக்கம், அலிஷியா உயிருடன் பத்திரமாக வீடு திரும்பிய விடயம் அவளது பெற்றோருக்கும் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தினாலும், மறுபக்கம், அவள் எங்கு சென்றால், நான்கு ஆண்டுகளாக எங்கிருந்தாள் என்பது குறித்த விடயங்கள் தெரியாததால் பொலிசார் திகைப்படைந்துள்ளார்கள்.

அலிஷியா சற்று ரிலாக்ஸ் ஆக நேரம் கொடுத்துள்ள பொலிசார், அவளுக்கு என்ன ஆனது என்பது குறித்து பின்னர் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...