பொலிஸ்
இலங்கைஏனையவைசெய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் தம்பதி கைது!!

Share

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் தம்பதி கைது!!

கொழும்பின் புறநகரான பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு உட்பட்ட இரு உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெஸ்பேவயில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற பாரவூர்தியை நிறுத்துமாறு இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமிக்ஞை செய்துள்ளனர்.

பாரவூர்தியை துரத்திச் சென்ற பொலிஸார்
எனினும் அஜாக்கிரதையாக ஓட்டப்பட்ட குறித்த பாரவூர்தி நிறுத்தப்படாமல் பயணித்துள்ள நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதனை துரத்திச் சென்றுள்ளனர்.

பின்னர், அந்த பாரவூர்தி அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அதிலிருந்த ஒரு பெண் உட்பட கிட்டத்தட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர், பாரவூர்தியை நிறுத்துமாறு சைகை காட்டி அதனை துரத்திச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபர்கள் இருவர் கைது
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் தற்போது களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தம்பதிகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களின் இரண்டு மகன்மார் உட்பட தாக்குதலுடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...