tamilni 347 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் ருவான் விஜேவர்தன

Share

ஜனாதிபதித் தேர்தலில் ருவான் விஜேவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தின் புதிய அமைப்பாளராக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பலமண்டல கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளார் “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாரிய கூட்டணியில் போட்டியிடுவார்.

இந்த கூட்டணி சிறிலங்கா சுதந்திர கட்சி, பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற உட்பட கட்சிகளில் இருந்தவர்களால் உருவாக்கப்படும் ஜனாதிபதி விக்ரமசிங்க இந்த கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறார் என்றும் விஜேவர்தன கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், வத்தளை அமைப்பாளராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அலகப்பெரும ஆகிய மூவருக்கும் இடையிலான போட்டியே இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடிக்கடி காட்டும் தயக்கம் காரணமாகத் தேர்தலில் போட்டியிட மாட்டார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது ‘ஆசை- பயம் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...