rtjy 268 scaled
உலகம்செய்திகள்

கேமரூன் நாட்டில் கட்டிட விபத்து: 16 பலி

Share

கேமரூன் நாட்டில் கட்டிட விபத்து: 16 பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் தற்போது வரை 16 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவக்கின்றன.

கேமரூன் தலைநகா் யாவுண்டேயிலிருந்து 210 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரமான டெளவாலாவில் நேற்றையதினம் (23.07.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டாா் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு மாடி கட்டடம் இடிந்து ஒரு சிறிய கட்டடத்தின் மீது விழுந்ததில், இடிபாடுகளுக்கு இடையே காயமடைந்தனா்.

‘மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகமாகக் கூடும்’ என அந்தப் பிராந்தியத்தின் ஆளுநா் தெரிவித்துள்ளார்.

டெளவாலா நகரில் தரம் குறைவாகக் கட்டப்பட்ட கட்டடடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அவ்வப்போது நேரிடுகின்றன.

மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் உள்ள கட்டடங்களை டெளவாலா நகர நிா்வாகம் தற்போது இடித்து வருகிறது. ஆனால், இப்போது இடிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம் அந்த அபாய பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...