தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை
இந்தியாசெய்திகள்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை

Share

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை, கோயம்புத்தூர், மதுரை உள்ளட்ட 9 மாவட்டங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45).

முன்னாள் பாமக செயலாளரான இவர் கடந்த 2019ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவிடைமருதூர் பொலிசார் பலரை கைது செய்தனர், பின்னாளில் இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடந்தது.

இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில், தற்போது சோதனை நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...