பால் மா நுகர்வு வரிசையில் இலங்கை முன்னணி!
இலங்கைசெய்திகள்

பால் மா நுகர்வு வரிசையில் இலங்கை முன்னணி!

Share

பால் மா நுகர்வு வரிசையில் இலங்கை முன்னணி!

உலகில் அதிக அளவில் பால்மாவை நுகரும் நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை கால்நடைவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிக அளவில் பால்மாவை நுகரும் ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

திரவ பாலின் நுகர்வுடன் ஒப்பிடும்போது பால்மா நுகர்வானது ஆரோக்கியத்திற்கும் போசாக்கிற்குக்கும் பொருத்தமானது அல்ல. திரவ பால் நுகர்வினை பிரச்சாரம் செய்வது சவால் மிக்கது.

இலங்கையில் 337 கால்நடை வள காரியாலயங்கள் காணப்படுவதாகவும் அவற்றைக் கொண்டு திரவ பால் நுகர்வினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான பாலின் 40 வீதமான அளவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஏனைய பால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...