இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம்
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம்

Share

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம்

நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 ​​தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, வேகமாக வளர்ந்துவரும் நாடாக இலங்கை சர்வதேச ரீதியில் முன்னுதாரணமாக திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் போது பயனுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.

பரிஸ் குழுமம் உள்ளிட்ட தரப்புக்கள் யோசனை முன்வைப்பதற்கு இருந்த வாய்ப்புக்கள் மூலம் பயன்பெறாத எதிர்க்கட்சி பொது எதிர்ப்பை மாத்திரம் காட்டுவது கவலைக்குரிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...