உலகம்செய்திகள்

திருக்குறளை உலகறியச் செய்தவருக்கு கனடாவில் உருவச்சிலை: முதல்வர் மு.கா.ஸ்டாலின் பெருமிதம்

Share

திருக்குறளை உலகறியச் செய்தவருக்கு கனடாவில் உருவச்சிலை: முதல்வர் மு.கா.ஸ்டாலின் பெருமிதம்

திருக்குறளை உலகறியச் செய்த ஜி.யு. போப்பிற்கு (George Uglow Pope) கனடாவில் உருவச்சிலை அமைக்கப்பட்டதை குறித்து பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜி. யு. போப் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி அளப்பரியது. அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஆவார்.

தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
அவரது மொழிபெயர்ப்பு உன்னதமான மொழிபெயர்ப்பாக இன்றும் போற்றப்படுகின்றது. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பன்னிரெண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரது அரிய இப்பணி, தமிழ் மொழியை தமிழர் அல்லாதவர்களிடமும் கொண்டு சேர்த்தது. போப் ஐயர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர், ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றினார்.

அதன் பின்பும், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் (oxford) பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, அப்போது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஜி.யு. போப் தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அவரது முழு உருவச்சிலையை நிறுவி அவரது புகழுக்கு பெருமை சேர்த்தது.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு வரும் எங்கள் திராவிட அரசு, தமிழ் இலக்கிய நூல்களை, பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக ஜி.யு.போப் பெயரில் விருது வழங்கியும் சிறப்பித்து வருகிறது.

இம்முயற்சியை முன்னெடுக்கின்ற கனடியத் தமிழர் பேரவைக்கும், கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...