tamilni 251 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share

ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கலுக்கான காலக்கெடுவை வழங்கிய ஜனாதிபதி, அது நடைமுறைப்படுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறைபாடுகள் இருப்பின் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பெறப்பட்ட வருவாய் ஈட்டும் முறையை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கமரூனின் கீழ் இந்த விடயத்தில் பணியாற்றிய அமைச்சர் Francis Maude, இத்துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகளைப் பெற இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகில் காணப்படும் புதிய போக்குகளை அவதானித்து தேவையான அமைப்பை அரசாங்கம் தயார் செய்ய வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக கணக்காய்வு சட்டத்தில் புதிய சட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...