tamilni 251 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share

ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கலுக்கான காலக்கெடுவை வழங்கிய ஜனாதிபதி, அது நடைமுறைப்படுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறைபாடுகள் இருப்பின் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பெறப்பட்ட வருவாய் ஈட்டும் முறையை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கமரூனின் கீழ் இந்த விடயத்தில் பணியாற்றிய அமைச்சர் Francis Maude, இத்துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகளைப் பெற இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகில் காணப்படும் புதிய போக்குகளை அவதானித்து தேவையான அமைப்பை அரசாங்கம் தயார் செய்ய வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக கணக்காய்வு சட்டத்தில் புதிய சட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...