எலான் மஸ்க்கின் புதிய முயற்சி
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

எலான் மஸ்க்கின் புதிய முயற்சி

Share

எலான் மஸ்க்கின் புதிய முயற்சி

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் தொழிலதிபருமான எலான் மஸ்க் எக்ஸ் ஏஐ (xAI) எனும் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

ஓபன்ஏஐ (openai) நிறுவனத்தின் சட்ஜிபிடி (chatgpt) உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு போட்டியாகவே எலான் மஸ்க் மேற்படி நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

அத்துடன், இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழிநுட்பமானது எந்தளவிற்கு உலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோ மறுப்புறம், மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் தனது மற்ற நிறுவனங்களான டுவிட்டர் மற்றும் டெஸ்லாவுடன் xAI நெருக்கமாகச் செயல்படும் எனவும் நாங்கள் X Corp-லிருந்து ஒரு தனி நிறுவனமாக செயல்படுவோம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் கைது!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...