அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
இலங்கைசெய்திகள்

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Share

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

அரச மருத்துவமனைகளில் உள்ள மொத்த சிடி ஸ்கேனர் இயந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த தகவலை அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் அரச மருத்துவமனைகளில் மொத்தம் 44 சிடி ஸ்கேன் இயந்திரங்கள் காணப்படுகின்றன.

அதன்படி, கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 12 சிடி ஸ்கேன் இயந்திரங்களும், ஏனையவை குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரணை, தேசிய பல் வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றன.

இதில் சில இயந்திரங்கள் பல மாதங்களாக செயல்படவில்லை எனவும் மொத்தத்தில், தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத ஏழை மக்களே இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு வருடங்களாக சுகாதார அமைச்சுக்கு போதிய நிதி வழங்கப்படாததால் இந்த இயந்திரங்களை புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...

03 20
இலங்கைஅரசியல்

பழைய ஏகபோகங்களை நீக்கிப் புதிய மாஃபியாக்களை உருவாக்கக் கூடாது: மனோ கணேசன் எச்சரிக்கை!

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்வனவுகளில் நிலவும் ஏகபோகக் கூட்டணிகளை (Monopolies) முறியடிப்பதாக ஜனாதிபதி அநுர...

02 19
செய்திகள்உலகம்

யுத்த நிறுத்தத்தை ஏற்க முடியாது, போர் முழுமையாக முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான தற்போதைய இராணுவ மோதல்கள் முடிவுக்கு வர வேண்டுமாயின், வெறும்...

01 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு: குடும்பத் தகராறில் கொலையா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தென்மராட்சி,...