அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
இலங்கைசெய்திகள்

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Share

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

அரச மருத்துவமனைகளில் உள்ள மொத்த சிடி ஸ்கேனர் இயந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த தகவலை அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் அரச மருத்துவமனைகளில் மொத்தம் 44 சிடி ஸ்கேன் இயந்திரங்கள் காணப்படுகின்றன.

அதன்படி, கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 12 சிடி ஸ்கேன் இயந்திரங்களும், ஏனையவை குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரணை, தேசிய பல் வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றன.

இதில் சில இயந்திரங்கள் பல மாதங்களாக செயல்படவில்லை எனவும் மொத்தத்தில், தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத ஏழை மக்களே இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு வருடங்களாக சுகாதார அமைச்சுக்கு போதிய நிதி வழங்கப்படாததால் இந்த இயந்திரங்களை புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...