rtjy 73 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

Share

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

நாட்டின் பொருளாதார மீட்சியை இரண்டாம் அரையாண்டில் காணலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நிலைமையானது இனிவரும் காலங்களிலும் தொடர்வது உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிஎன்பிசிக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

முன்னைய நிலவரத்தையும் தற்போதைய நிலைமையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது எந்தவொரு அத்தியாவசிய உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை. அத்துடன் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலைகளும் குறைந்துள்ளன.

பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் மேலும் சிலவற்றின் இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இந்த ஆண்டு முழுவதும் ரூபாவின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. பங்குச் சந்தை விலைக் குறியீடும் நேர் பெருமானத்தில் இருப்பதைக் காணலாம்.

எனவே பொருளாதாரத்தின் மீட்சியை ஆண்டின் இரண்டாம் பாதியில் காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மையில் சுமார் 300 வரையிலான பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வாகன இறக்குமதி தடையை நீக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த போதும் அதற்கான முடிவினை எடுக்கும் சாதகமான சூழல் தற்போது இல்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தீவிரமாக ஆராய வேண்டியிருப்பதாகவும் நிதி அமைச்சு தரப்பிலிருந்து கூறப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...