rtjy 67 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்

Share

இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளைஞர்கள், தாய்மார் உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். இவ்வாறாக வேலைவாய்ப்புக்காக செல்லும் பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த வருடத்தின் இறுதிக்கு முன்னதாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வோர் குறித்து மாத்திரம் தாம் அறிந்திருப்பதாகவும், பணியகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாமல் செல்வோர் தொடர்பான புள்ளிவிவரங்கள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Screenshot 2025 11 28 000113
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு இரணைப்பாலை துயிலுமில்லத்தில் கொட்டும் மழையிலும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வானது, இன்று...

Screenshot 2025 11 28 000113
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா ஈச்சங்குளத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்துக்கு அருகில் மழையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் (Eachankulam) பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று...

WhatsApp Image 2025 11 27 at 23.47.04 f47798a4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் ‘மாவீரர் தின...

images 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் எலிக்காய்ச்சல்...