உடைந்ததது பெரமுன! திணறும் மகிந்த தரப்பு
இலங்கைசெய்திகள்

உடைந்ததது பெரமுன! திணறும் மகிந்த தரப்பு

Share

உடைந்ததது பெரமுன! திணறும் மகிந்த தரப்பு

அரசாங்கத்தில் பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் குழு புதிய அரசியல் சக்தியொன்றை உருவாக்குவது தொடர்பில் இறுதிக்கட்ட கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த குழு கடந்த சில மாதங்களில் அவ்வப் போது கூடி புதிய வேலைத்திட்டம் குறித்து கலந்து ரையாடியது.
அந்த பேச்சுகள் நிறைவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் புதிய அணிக்கு பெயரொன்றை தெரிவு செய்யும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாக தெரிகிறது.

புதிய கூட்டணியின் அரசியல் கொள்கை,அதன் வகிபாகங்கள் குறித்து சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்றும் நடந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே டலஸ் அணி , விமல் அணி என பிரிந்து சென்றுள்ள நிலையில் எஞ்சியுள்ள இளவயது எம்.பிக்களும் புதிய கூட்டணி தொடர்பில் செயற்பட ஆரம்பித்திருப்பது அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக் கியுள்ளதாக அறியமுடிகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 4
உலகம்செய்திகள்

இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், 2025...

Murder Recovered Recovered Recovered 5
இலங்கைசெய்திகள்

1000 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிப்பு: அமைச்சர் தகவல்

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துறைமுகங்களில் ஏற்பட்ட நெறிசல் காரணமாக இதற்கு முன்னர் 14 சந்தர்ப்பங்களில் சுமார்...

Murder Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம்! இந்த மாதம் முதல் புதிய தொகை

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Murder Recovered Recovered Recovered 2
இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

நீர்கொழும்பு- துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உத்தரவை மீறிச் சென்ற...