விளாடிமிர் புடினை கொல்ல போடப்பட்ட சதி திட்டம்
உலகம்செய்திகள்

விளாடிமிர் புடினை கொல்ல போடப்பட்ட சதி திட்டம்

Share

விளாடிமிர் புடினை கொல்ல போடப்பட்ட சதி திட்டம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பாலம் ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதி புடினை வெடி வைத்து கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கிரெம்ளின் இருந்து மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ரஷ்ய ஜனாதிபதி புடினின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றுப்பாலம் ஒன்று வெடிமருந்து பதுக்கி வைத்து, அதனை சரியான நேரத்தில் வெடிக்க செய்து புடினை கொலை செய்ய தீட்டப்பட்டு இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக பெடரல் பாதுகாப்பு சேவைகள்(FSO ) தகவல் தெரிவித்துள்ளது.

VChK-OGPU என்ற டெலிகிராம் சேனல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் வாகனம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட பெயரிடப்படாத பாலத்தின் கீழே சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்று வெடிமருந்துகளை கொட்டி இருக்கலாம் என தகவல்கள் தெரியவந்தது.

இதையடுத்து, புடினை கொலை செய்யும் முயற்சியில் மொஸ்க்வா ஆற்றின் அடிப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகில் இருந்து வெடிமருந்துகள் கொட்டப்பட்டு உள்ளதா என்பதை FSO படைகள் சரி பார்த்து கொண்டு இருந்தனர்.

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி அதிக கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் FSO அதிகாரிகள் படகில் இருந்த பணியாளர்களின் விவரங்களை சரிபார்த்தனர், அதில் பாலத்தை பழுது பார்ப்பதற்காக பணியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் இத்தகைய செயல்களை செய்தவர்கள் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...