இலங்கையின் பரிதாப நிலை - மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பரிதாப நிலை – மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்

Share

இலங்கையின் பரிதாப நிலை – மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்

இலங்கை அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, ​​118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு அமைய இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஊடகமான பிபிசி வானொலியில் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அறிக்கைக்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இலங்கையின் நிலுவையிலுள்ள கடன் 118.7 சதவீதம் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், 2032 ஆம் ஆண்டளவில் இந்த கடன் சதவீதத்தை 95% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அதன் பிற செலவுகள் இருந்த போதிலும் நாட்டின் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை செலுத்துவதற்காக வருடாந்த அரசாங்க வருவாயில் 70 சதவீதத்தை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...