23 649c151bc462b
இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் சீனா – கொழும்பில் முதலிடப்படும் 37 ஆயிரம் கோடி

Share
கொழும்பு துறைமுக நகரில் 37 ஆயிரம் கோடி ரூபாவை முதலீடு செய்ய தயாராக உள்ளதாக சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் கூறியுள்ளது.

பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர் வாய் இயன் சான் இதனைத் தெரிவித்துள்ளர்.

இந்த ஆண்டிற்குள் குறித்த நிதியை கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

சீனாவில் அலி சப்ரி

தற்போது சீனாவுக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் அலி சப்ரி சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் பூலின் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக தாம் ஆதரவளிப்பதாக எக்ஸிம் வங்கியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...