வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி... பயத்தில் சீன ஜனாதிபதி
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி… பயத்தில் சீன ஜனாதிபதி

Share

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி… பயத்தில் சீன ஜனாதிபதி

பலம் பொருந்திய வாக்னர் கூலிப்படை, தமக்கு ஆதரவளித்துவந்த விளாடிமிர் புடினுக்கு எதிராகவே கிளர்ச்சியில் இறங்கியுள்ளது சீன ஜனாதிபதிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை வாக்னர் கூலிப்படை தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் எந்த மோதலும் இன்றி Rostov-on-Don என்ற நகரத்தை கைப்பற்றினார். தொடர்ந்து தலைநர் மாஸ்கோவுக்கு வாக்னர் கூலிப்படையினர் முன்னேறினர்.

ஆனால் தலைநகருக்கு சுமார் 120 மைல்கள் தொலைவில் வைத்து விளாடிமிர் புடினுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, கிளர்ச்சியை கைவிட்டுள்ளனர். மொத்த ரஷ்யாவையும் இரும்புக்கரம் கொண்டு ஆளும் விளாடிமிர் புடினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது வாக்னர் கூலிப்படையின் எதிர்பாராத ஆயுதக் கிளர்ச்சி.

இந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் இந்த ஆயுதக் கிளர்ச்சியானது சீன ஜனாதிபதிக்கு உண்மையான பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக மைக் பாம்பியோவின் முன்னாள் சீனக் கொள்கை ஆலோசகரான Miles Yu தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரு சிக்கல் சீனாவில் எதிரொலிக்கலாம் என ஜி ஜின்பிங் கருதுவதாக Miles Yu குறிப்பிட்டுள்ளார். வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி என்பது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது என்கிறார் Miles Yu.

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சியானது மிகவும் செல்வாக்கற்ற ஆட்சிக்கு மாற்று இருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளது. இதுவே சீனாவை மிகவும் பயப்பட வைத்துள்ளது என்கிறார் Miles Yu.

வாக்னர் கூலிப்படை போன்று, ஜி ஜின்பிங் ஆட்சிக்கு எதிராக ஒரு கிளர்ச்சி உருவாகலாம் என்ற அச்சமே அவர்களை கவலை கொள்ள வைத்துள்ளது என்கிறார்.

மட்டுமின்றி, 11 ஆண்டுகள் நீண்ட ஆட்சியில் ஜி ஜின்பிங் பல்வேறு ராணுவ அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் எனவும், முன்னாள் ஜனாதிபதியின் கீழ் செயல்பட்ட பெரும்பான்மையான ராணுவ தலைவர்களை ஜி ஜின்பிங் நீக்கியுள்ளார் எனவும் Miles Yu தெரிவிக்கிறார்.

இதனாலையே, கிம் ஜோங் உன் போன்று மிகப்பெரிய பாதுகாப்பு வட்டத்தில் ஜி ஜின்பிங் சீனாவுக்குள் வலம் வருகிறார். இந்த வாக்னர் கிளர்ச்சி சீனத் தலைமையையும் உண்மையில் பயமுறுத்தியுள்ளது, மட்டுமின்றி அரசியல் பொறுப்பில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர் விலகலாம் எனவும் அஞ்சுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...