வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி... பயத்தில் சீன ஜனாதிபதி
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி… பயத்தில் சீன ஜனாதிபதி

Share

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி… பயத்தில் சீன ஜனாதிபதி

பலம் பொருந்திய வாக்னர் கூலிப்படை, தமக்கு ஆதரவளித்துவந்த விளாடிமிர் புடினுக்கு எதிராகவே கிளர்ச்சியில் இறங்கியுள்ளது சீன ஜனாதிபதிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை வாக்னர் கூலிப்படை தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் எந்த மோதலும் இன்றி Rostov-on-Don என்ற நகரத்தை கைப்பற்றினார். தொடர்ந்து தலைநர் மாஸ்கோவுக்கு வாக்னர் கூலிப்படையினர் முன்னேறினர்.

ஆனால் தலைநகருக்கு சுமார் 120 மைல்கள் தொலைவில் வைத்து விளாடிமிர் புடினுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, கிளர்ச்சியை கைவிட்டுள்ளனர். மொத்த ரஷ்யாவையும் இரும்புக்கரம் கொண்டு ஆளும் விளாடிமிர் புடினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது வாக்னர் கூலிப்படையின் எதிர்பாராத ஆயுதக் கிளர்ச்சி.

இந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் இந்த ஆயுதக் கிளர்ச்சியானது சீன ஜனாதிபதிக்கு உண்மையான பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக மைக் பாம்பியோவின் முன்னாள் சீனக் கொள்கை ஆலோசகரான Miles Yu தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரு சிக்கல் சீனாவில் எதிரொலிக்கலாம் என ஜி ஜின்பிங் கருதுவதாக Miles Yu குறிப்பிட்டுள்ளார். வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி என்பது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது என்கிறார் Miles Yu.

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சியானது மிகவும் செல்வாக்கற்ற ஆட்சிக்கு மாற்று இருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளது. இதுவே சீனாவை மிகவும் பயப்பட வைத்துள்ளது என்கிறார் Miles Yu.

வாக்னர் கூலிப்படை போன்று, ஜி ஜின்பிங் ஆட்சிக்கு எதிராக ஒரு கிளர்ச்சி உருவாகலாம் என்ற அச்சமே அவர்களை கவலை கொள்ள வைத்துள்ளது என்கிறார்.

மட்டுமின்றி, 11 ஆண்டுகள் நீண்ட ஆட்சியில் ஜி ஜின்பிங் பல்வேறு ராணுவ அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் எனவும், முன்னாள் ஜனாதிபதியின் கீழ் செயல்பட்ட பெரும்பான்மையான ராணுவ தலைவர்களை ஜி ஜின்பிங் நீக்கியுள்ளார் எனவும் Miles Yu தெரிவிக்கிறார்.

இதனாலையே, கிம் ஜோங் உன் போன்று மிகப்பெரிய பாதுகாப்பு வட்டத்தில் ஜி ஜின்பிங் சீனாவுக்குள் வலம் வருகிறார். இந்த வாக்னர் கிளர்ச்சி சீனத் தலைமையையும் உண்மையில் பயமுறுத்தியுள்ளது, மட்டுமின்றி அரசியல் பொறுப்பில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர் விலகலாம் எனவும் அஞ்சுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...