23 6499aa88c0e2f
உலகம்செய்திகள்

அடிக்கு மேல் அடிவாங்கும் ரஷ்யா – எதிராக களமிறங்கிய மற்றுமொரு நாடு..!

Share

உக்ரைனுக்கு கூடுதல் கவச வாகனங்களை அவுஸ்திரேலியா வழங்க இருக்கிறது,

இதுதொடர்பாக ,110 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குகிறது. அதில் 70 ராணுவ வாகனங்களும், 28M 113 கவச வாகனங்களும் 14 சிறப்பு நடவடிக்கை வாகனங்களும் அடங்கும்.

ரஷ்யத் தாக்குதலிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீசி தெரிவித்துள்ளார்.

கைகொடுக்கும் அவுஸ்திரேலியா

“இந்தக் கூடுதல் ஆதரவு மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ரஷ்யாவின் முறையற்ற செயல், சட்டவிரோத போரை எதிர்த்து உக்ரைன் மக்கள் மிகுந்த துணிச்சலுடன் அலையெனப் பொங்கி எழுந்துள்ளனர். அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவு உக்ரைன் மக்களுக்குக் கைகொடுக்கும்,” என்று அவுஸ்திரேலியத் தலைநகர் கென்பராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு அல்பினேசி கூறினார்.

கடந்த வாரயிறுதியில் ரஷ்ய நகரான ரொஸ்டோவை வாக்னர் துணைப் படை கைப்பற்றி குறுகிய நேரத்துக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அதிகாரத்துக்குச் சவால் விடுக்கும் வகையில் இருந்தது. ஆனால் அப்படை ரொஸ்டோவ் நகரிலிருந்து பின்வாங்கியது.

இந்த நிகழ்வுக்கும் கூடுதல் ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா முன்வந்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று திரு அல்பினேசி தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...