23 6499aa88c0e2f
உலகம்செய்திகள்

அடிக்கு மேல் அடிவாங்கும் ரஷ்யா – எதிராக களமிறங்கிய மற்றுமொரு நாடு..!

Share

உக்ரைனுக்கு கூடுதல் கவச வாகனங்களை அவுஸ்திரேலியா வழங்க இருக்கிறது,

இதுதொடர்பாக ,110 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குகிறது. அதில் 70 ராணுவ வாகனங்களும், 28M 113 கவச வாகனங்களும் 14 சிறப்பு நடவடிக்கை வாகனங்களும் அடங்கும்.

ரஷ்யத் தாக்குதலிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீசி தெரிவித்துள்ளார்.

கைகொடுக்கும் அவுஸ்திரேலியா

“இந்தக் கூடுதல் ஆதரவு மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ரஷ்யாவின் முறையற்ற செயல், சட்டவிரோத போரை எதிர்த்து உக்ரைன் மக்கள் மிகுந்த துணிச்சலுடன் அலையெனப் பொங்கி எழுந்துள்ளனர். அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவு உக்ரைன் மக்களுக்குக் கைகொடுக்கும்,” என்று அவுஸ்திரேலியத் தலைநகர் கென்பராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு அல்பினேசி கூறினார்.

கடந்த வாரயிறுதியில் ரஷ்ய நகரான ரொஸ்டோவை வாக்னர் துணைப் படை கைப்பற்றி குறுகிய நேரத்துக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அதிகாரத்துக்குச் சவால் விடுக்கும் வகையில் இருந்தது. ஆனால் அப்படை ரொஸ்டோவ் நகரிலிருந்து பின்வாங்கியது.

இந்த நிகழ்வுக்கும் கூடுதல் ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா முன்வந்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று திரு அல்பினேசி தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...