Untitled 1 19 scaled
இந்தியாசெய்திகள்

எலும்பும் தோலுமாக அரிக்கொம்பன் யானை!

Share

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் வைரலானது.

தினமும் யானை சாப்பிடும் உணவு மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

உடல் மெலிவடைய காரணம் புதிய சீதோஷ்ண நிலை மற்றும் உணவு காரணமாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறுகையில், அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இருக்கிறது.

முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் உப்புசமாக இருக்கலாம், ஆனால் தற்போது காட்டு உணவுகள் மற்றும் புல் வகைகளை சாப்பிட்டு வருகிறது.

தற்போது தான் வனவிலங்குகளுக்கு உரித்தான தோற்றத்தில் மாறிக்கொண்டிருக்கிறது, மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வருகிறது.

யானைக்கு பிடித்த உணவுகள் கிடைக்காததால் மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி எடுத்தது, ஆனா் தீக்கு பயப்படும் என்பதால் வனத்துறையினர் தீயை வைத்து காட்டுக்குள் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...

14 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ரூ. 1,945 இலட்சம் மீளப் பெற்றுக்கொடுப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1,945 இலட்சம்...