49laMOJqpwOodysZi1Dm 1
இந்தியாஉலகம்செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்த மக்களால் பரபரப்பு!

Share

திருமண நிகழ்ச்சியில் உணவு உண்டவர்கள் திடீரென மயங்கி விழுந்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மாரஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் எடப்பால் அருகே காலடி பகுதியை சார்ந்த இளைஞனுக்கும் துருவாணம் பகுதியில் இன்றைய தினம் திருமணம் இடம்பெற்றுள்ளது.

திருமண வைபவத்தில் மணமக்களை வாழ்த்த உறவினர்கள், அப்பகுதி மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் திருமணத்தின் போது இதில் அளிக்கப்பட்ட விருந்தில் உணவருந்திய சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கமும், தொடர்ந்து உணவருந்திய பலருக்கும் உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு உள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அங்கு வழங்கப்பட்ட உணவில் விஷத்தன்மை இருந்ததா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு வகைகளிலிருந்து மாதிரி சேமித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...