eGUMJeqWW7nzFmdHR3bd 1
உலகம்செய்திகள்

இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

Share

இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்டு வரும் தமிழ் மக்கள் நினைவாக இத்தாலியில் Palermo, Biella மாற்று Reggio Emilia நகரங்களில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

அவ் வகையில் Biella நகரில் சென்ற ஆண்டு Valdilana வில் Piazza XXV Aprile எனும் இடத்தில் நடுகையிட்ட மரம் மற்றும் நினைவு தடத்திற்கு முன்னராக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. Valdilana நகரசபையின் முதல்வர் Mario Carli மற்றும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் Valdilana வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன. வணக்கநிகழ்வுகளைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதைகள், தமிழின அழிப்பு தொடர்பாக இளையோர்களின் கருத்துகள், முதல்வர் மாரியோ கார்லியின் சிறப்புரை மற்றும் தமிழின அழிப்பு நாள் சிறப்புரை என்பன இடம்பெற்றிருந்தன. நிகழ்வின் இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டதுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...

21 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாத்துவ – பின்வத்தை ரயில் பாலத்தில் கோர விபத்து: சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

வாத்துவ மற்றும் பின்வத்தை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது இன்று...

20 8
செய்திகள்அரசியல்இலங்கை

சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டிய குற்றச்சாட்டு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்...