eGUMJeqWW7nzFmdHR3bd 1
உலகம்செய்திகள்

இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

Share

இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்டு வரும் தமிழ் மக்கள் நினைவாக இத்தாலியில் Palermo, Biella மாற்று Reggio Emilia நகரங்களில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

அவ் வகையில் Biella நகரில் சென்ற ஆண்டு Valdilana வில் Piazza XXV Aprile எனும் இடத்தில் நடுகையிட்ட மரம் மற்றும் நினைவு தடத்திற்கு முன்னராக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. Valdilana நகரசபையின் முதல்வர் Mario Carli மற்றும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் Valdilana வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன. வணக்கநிகழ்வுகளைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதைகள், தமிழின அழிப்பு தொடர்பாக இளையோர்களின் கருத்துகள், முதல்வர் மாரியோ கார்லியின் சிறப்புரை மற்றும் தமிழின அழிப்பு நாள் சிறப்புரை என்பன இடம்பெற்றிருந்தன. நிகழ்வின் இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டதுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...