download 11 1 2
உலகம்செய்திகள்

படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்!

Share

சீன நாட்டவர் ஒருவர் திபெத்தில் சுற்றுலா சென்ற நிலையில், அவர் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளார்.சுற்றுலா பயணியின் புகாரை அடுத்து அந்த ஹொட்டல் நிர்வாகம் முன்னெடுத்த சோதனையில், படுக்கையின் அடியில் சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது கொலை வழக்கு விசாரணையை தூண்டியுள்ளது.

ஏப்ரல் 21ம் திகதி லாசாவில் உள்ள ஹொட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 20ம் திகதி தமது நண்பர்களுடன் லாசா பகுதிக்கு சுற்றுலா சென்ற அந்த சீனத்து நபர், ஹொட்டல் ஒன்றில் தங்கும் அறைக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஏப்ரல் 21ம் திகதி இரவு உணவருந்த சென்ற அவர், சுமார் 10.30 மணியளவில் அறைக்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த அறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளதை அவர் உணர்ந்துள்ளார்.இதனையடுத்து, ஹொட்டல் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, தம்மால் அந்த அறையில் தங்க முடியவில்லை எனவும், நாலாவது மாடியில் அறை ஒன்றை ஒதுக்கவும் கோரியுள்ளார்.

இந்த நிலையில், நள்ளிரவு கடந்த வேளையில் பொலிஸார் முன்னிலையில் அந்த ஹொட்டல் அறை பரிசோதிக்கப்பட்டது. அப்போது படுக்கையின் அடியில் சடலம் ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

அந்த ஹொட்டலில் இன்னொரு அறையில் கொலை செய்யபப்ட்டு சடலத்தை குறித்த சீனத்து சுற்றுலா பயணி தங்கியிருந்த அறையில் மறைத்துள்ளனர். பொலிஸார் முன்னெடுத்த துரித நடவடிக்கையின் இறுதியில், சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...