1fv837FpK23efl0TSlVr 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காட்டிற்குள் நிர்வாணமாக கூச்சலிட்ட பெண் மீட்பு!

Share

காட்டிற்குள் நிர்வாணமாக கூச்சலிட்ட பெண் மீட்பு!

கம்பளை அம்புலுவா காட்டுப்பகுதியில் மூன்று நாட்களாக கூச்சலிட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் நேற்று (02.05.2023) கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பெண் கடந்த மூன்று நாட்களாக ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் நிர்வாணமாக இவ்வாறு கூச்சலிட்டுக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்பதாக கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பின்னர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...