ACbPBInEO5gPSCQ3lvGK 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீதிமன்ற பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மாயம்!

Share

சிலாபம் மாரவில நீதிமன்றத்தின் பெட்டகத்தில் இருந்த 22 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் பணிப்புரியும் பெண் உட்பட இரண்டு ஊழியர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 22 லட்சத்து 7 ஆயிரம் ரூபா காணாமல் போயுள்ளதாக மாரவில நீதிமன்ற பதிவாளர் சாகரிகா மானேல் விக்ரமசிங்க கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

பெட்டகத்திற்கு பொறுப்பாக ஒரு ஆண் ஊழியரும் பெண் ஊழியரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும் பதிவாளர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நீதிமன்றத்தில் பணிப்புரியும் சில ஊழியர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், பெட்டகத்திற்கு பொறுப்பாக இருந்த ஆண் ஊழியரையும் பெண் ஊழியரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...