1595739438 students 2
செய்திகள்இலங்கை

பாடசாலைகள் ஆரம்பம்!- வெளியானது அறிவிப்பு!!

Share

பாடசாலைகள் ஆரம்பம்!- வெளியானது அறிவிப்பு!!

எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது முன்னுரிமை கொடுக்க வேண்டிய வகுப்புகள் தொடர்பில் தற்போது திட்டமிடல்களை தயாரித்துள்ளோம்.

முதற்கட்டமாக, உயர்தரம், சாதாரணதரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பிரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு முகங்கொடுக்கின்ற மாணவர்களுக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். குறித்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்த தீர்மானத்தை உறுதியாக கூற முடியாது.

பாடசாலையை மிக விரைவில் ஆரம்பிக்குமாறு எமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,  சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மிக விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறோம்.

எதிர்வரும் காலங்களில் சரியான திட்டமிடலுடன் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும்போது குறைந்தளவு மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம், – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...