WhatsApp Image 2021 09 04 at 19.46.06
செய்திகள்இலங்கை

இறுதி ஊர்வலத்தில் பெருமளவு மக்கள்!!

Share

நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்ற நிலையில், அதில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை சாரதியான, அச்சுவேலி நாவற்காட்டை சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது-40) நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

இவர் வடமராட்சி அல்வாயில் திருணம் செய்திருந்தார். இவரது உடல் அல்வாயில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அச்சுவேலிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டிருந்தனர். இவர் செலுத்திவரும் இ.போ.ச. பேருந்தும் இறுதி ஊர்வலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....

25 68182df3d5ffd
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தனக்கான குழியைத் தானே தோண்டுகிறது – நாமல் ராஜபக்ஸ சாடல்!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம், தனக்கான அரசியல் குழியைத் தானே...

cefbc010 9b32 11ef a2b4 9bc43832f102.jpg
உலகம்செய்திகள்

நான் தூங்கவில்லை, கண்களை இமைத்தேன்! – உடல்நலம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உடல்நலம் மற்றும் ஆற்றல் குறித்து எழும் விமர்சனங்களுக்கு ‘தி...

image 61264ccd5d
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் ஆணையை அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டது – சஜித் பிரேமதாச காட்டம்!

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது கட்டணங்களை அதிகரித்து மக்கள்...