Elon Musk 16494179903x2 1
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

சிஇஒ ஆனார் எலான் மஸ்க்

Share

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 700 கோடி கொடுத்து வாங்கினார்.

ஸ்பேஸ்-எக்ஸ், நியூராலின்க் ஸ்டார்ட்-அப், போரிங் கம்பெனி போன்ற நிறுவனங்களை எலான் மஸ்க் நிர்வகித்து வருகிறார். ட்விட்டரை முழுமையாக தன்வசமாக்கிய எலான் மஸ்க், ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலரை பணி நீக்கம் செய்தததாக கூறப்படுகிறது.

இத்துடன் ட்விட்டர் வெரிபிகேஷன் சேவையை வைத்திருக்க கட்டணம் செலுத்தும் முறையையும் எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் பாட்களை முறியடிக்க முடியும் என்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவீனங்களுக்கும் விளம்பரதாரர்களை மட்டும் சார்ந்து இருக்க முடியாது என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

செக்யுரிட்டி ஃபைலிங்கில் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்று இருப்பதை எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். மற்றொரு ஃபைலிங்கில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒற்றை இயக்குனராக தான் பதவி வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் குழு நீக்கப்பட்ட நடவடிக்கை தற்காலிகமான ஒன்று தான் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

#world #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...