825408982sri lankan parliament
இலங்கைசெய்திகள்

22வது சட்டமூலம் இழுபறியில்!

Share

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவின் கடும் எதிர்ப்பு காரணமாக, அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், எம்.பிக்களான எஸ்.பி.திஸாநாயக்க, கலாநிதி சரத் வீரசேகர உள்ளிட்ட பலர் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பிகள் கூட்டத்திலும்
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் நிகழ்விலும் உத்தேச அரசியலமைப்பு வரைபுக்கு பல எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இவ்விரு கலந்துரையாடல்களிலும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைத் தவிர வேறு எவரும் அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.

அத்துடன், இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முதலில் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருந்த நிலையில், எதிர்ப்பு காரணமாக, அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த வாரம் விவாதம் நடத்தி நிறைவேற்றுவதும் சிக்கலாக மாறியுள்ளதாக அறியமுடிகிறது.

 

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2Fkdr4RAxh3Zzhkl5WtR4D
இலங்கை

மட்டக்களப்பில் போதிய பெற்றோல் கையிருப்பு: “செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” – மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் (Petrol) கையிருப்பில் இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...

l91920251128120058
செய்திகள்உலகம்

இம்ரான் கான் வெளிநாடு செல்ல அரசு அழுத்தம்: பிடிஐ செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் பரபரப்புத் தகவல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் (Adiala Jail) உயிரிழந்துவிட்டதாகச்...

images 18
செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலை: தடைப்பட்ட நீர் விநியோகம் இரண்டு நாட்களுக்குள் சீரமைக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் சபை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர்...

images 17
செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் அகப்பட்டு நீர்கொழும்பில் இருவர் உயிரிழப்பு

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்....