election commission 10.12.2021
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்! – விரைவில் வர்த்தமானி

Share

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி பத்திரம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி சபைகளின் கால எல்லை கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதன் காலஎல்லையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்பதாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தி அதற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி நீடிக்கப்பட்டுள்ள கால எல்லை நிறைவடைவதற்கு முன்பதாக மூன்று மாதங்களுக்குமுன் தேர்தலை நடத்துவது தொடர்பில் அறிவிப்பை வெளியிடவேண்டியுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இம்முறை வாக்காளர் இடாப்பில் கையொப்பமிடுவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க கையெழுத்திட்ட பின்னர் தேர்தல் நடத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#srilanka news

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...