111644558 f3725097 4a19 4a56 832d 50c4305b7672 1
உலகம்செய்திகள்

அடுத்த பிரதமர் யார்? – வலுக்கும் போட்டி

Share

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி வலுத்துள்ளது.

இதில் சட்டமா அதிபர் சுவெல்லா பிரேவமான் மற்றும் ஸ்டீவ் பேக்கரை தொடர்ந்து அந்தப் பதவிக்கான போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டொம் டெஜன்டட்டும் குதித்துள்ளார்.

தம்மைத் தொடர்ந்து புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்கப்போவதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும் அவர் உடன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சக கட்சியைச் சேர்ந்த பலர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் அண்மைய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்.பிக்கள் சிலரை, பிரதமரின் இராஜினாமாவைக் கோரத் தூண்டியது.

இந்நிலையில் ஆளும் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக கால அட்டவணை அடுத்த வாரம் உறுதி செய்யப்படவுள்ளது. புதிய பிரதமர் வரும் செப்டெம்பரில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...