japan
உலகம்செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு!

Share

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஷின் சோ அபே உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அபே என்று நாரா என்ற மேற்கு ஜப்பான் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே மக்கள் முன் உரையாடிக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை தொடர்ந்து உடல் முழுக்க ரத்தத்தோடு அபே சுருண்டு விழுந்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரின் நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் துப்பாக்கி சூடு குறித்த பல்வேறு கலவையான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஷின் சோ அபே தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் நபரை பொலிஸார் கைது செய்துவிசாரித்து வருகிறார்கள். அவர் உயிருக்கு எதுவும் ஆபத்து உள்ளதா, காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஜப்பான் பிரதமராக இருந் ஷின்ஷோ அபே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக 2020இல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இவர் பிரதமர் பதவியை அலங்கரித்து வந்தார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 215
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு: குற்றப் பிரமுகரின் சகோதரர் உயிர் தப்பினார்!

அஹுங்கல்லா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘லோக்கு பட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பட்டி’...

world 217
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்புவோருக்காக விசேட இரயில் சேவைகள் அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தனது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்...