body scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாடிகானுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

Share

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரில் வீதியோர வாடிகானுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

எனினும், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மதுரங்குளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பகுதியில் டீசல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுதப்பட்டுள்ள நிலையில் அதனை அண்டிய வடிகானுக்குள் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வடிகானுக்குள் சடலம் ஒன்று கிடப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மதுரங்குளிப் பொலிஸார், விசாரனைகளை ஆரம்பித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர், டீசல் கொள்வனவு செய்ய வந்தவரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை தடத்தினர்.

அத்துடன், நீதிவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தடயவியல் பிரிவினருடன் இணைந்து மதுரங்குளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...