விபத்தில் பொலிஸ் துணைப் பரிசோதகர் பலி
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரத்தினபுரி விபத்தில் பொலிஸ் துணைப் பரிசோதகர் சாவு!

Share

இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் துணைப் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார்.

பொலிஸ் துணைப் பரிசோதகர் பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த் திசையில் வந்த லொறி மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் ஓட்டோவை ஓட்டிச் சென்ற பொலிஸ் துணைப் பரிசோதகர், படுகாயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...