284789843 557232705838174 6630191702765033949 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சம்பளப் பிரச்சினையால் முன்னாள் இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொலை!

Share

கொழும்பு, புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சம்பளப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளது என அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான முன்னாள் இராணுவச் சிப்பாயே உயிரிழந்தார்.

அத்துடன், அவருடன் இருந்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்த நபர், நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பும்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு – 07 பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் பணியாற்றிய அவர்களுக்கு 3 மாதங்களுக்கான சம்பளம் வழங்காமல் பணியிலிருந்து நிறுத்திய நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நட்டஈடு கோரியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தால் அவர்களுக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு விருந்தகத்தின் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தினர் என்று நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.

எனினும், சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என உயிரிழந்த நபரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...