யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

Share

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தணமடு ஆற்றுப்பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு , வில்லுக்கொலனி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வைத்தியராசா கோவிந்தராசா (வயது – 37) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

தனது செங்கல் உற்பத்தி செய்யும் இடத்துக்குச் சென்று அங்கு வேலை செய்து விட்டு, இரவாகியமையால் தான் தங்கிருக்கும் குடிசைக்குச் சென்று இருக்கும்போது காட்டுக்குள் இருந்த யானை இவரைத் தாங்கியுள்ளது.

படுகாயமடைந்த இவர் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு நாளை கடும் வெப்ப எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (மார்ச் 22, 2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும்...

06 17
செய்திகள்இந்தியா

வீட்டு வேலைகளைக் கணவனும் பகிர வேண்டும்: விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுரை!

வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்பக்...

05 19
செய்திகள்உலகம்

டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவின் போர் வியூகத்தை மாற்றும் புதிய திருப்பம்!

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு...

04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...