யாழ்ப்பாணம் கடற்பரப்பில் 12 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படையினர் இன்று காலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன்போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாவை மீட்டுள்ளனர். அதையடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரையும் கைதுசெய்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகையும், கைதுசெய்யப்பட்ட இளைஞரையும் சட்ட நடவடிக்கைக்காகப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment