8787
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். கடலில் 12 கோடி ரூபா பெறுமதியான கேரளாக் கஞ்சா மீட்பு!

Share

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் 12 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படையினர் இன்று காலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதன்போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாவை மீட்டுள்ளனர். அதையடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரையும் கைதுசெய்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகையும், கைதுசெய்யப்பட்ட இளைஞரையும் சட்ட நடவடிக்கைக்காகப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...