சாணக்கியன்
அரசியல்இலங்கைசெய்திகள்

சாணக்கியனின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு!

Share

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொதுச்சொத்துகளுக்கோ அல்லது தனியார் சொத்துகளுக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அவரது பணிப்பின் கீழ் செயற்படும் எவரும் சேதம் ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது என நேற்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது.

இந்தக் கட்டளை 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு எதிராக சாணக்கியன் எம்.பியால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...