வேலை நிறுத்தம் e1650687947895
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிபர்கள், ஆசிரியர்கள் திங்கள் வேலை நிறுத்தம்!

Share

தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்தி அரச பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக மாணவர்களும் ஊழியர்களும் பாடசாலைக்கு செல்வதற்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணி புரிவதற்கும் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்ற தங்களின் முன்மொழிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது என்று அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நியாயமான தீர்வை அரசு வழங்க வேண்டும் என்று கோரி எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...