வேலை நிறுத்தம் e1650687947895
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிபர்கள், ஆசிரியர்கள் திங்கள் வேலை நிறுத்தம்!

Share

தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்தி அரச பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக மாணவர்களும் ஊழியர்களும் பாடசாலைக்கு செல்வதற்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணி புரிவதற்கும் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்ற தங்களின் முன்மொழிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது என்று அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நியாயமான தீர்வை அரசு வழங்க வேண்டும் என்று கோரி எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...