photo
அரசியல்இலங்கைசெய்திகள்

லிற்றோ காஸ் விலை அதிகரிப்பை நிராகரித்தது அரசு!

Share

இன்று நள்ளிரவு  முதல் அமுலுக்குவரும் வகையில் லிற்றோ சமையல் (12.5 KG ) எரிவாயுவின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விலையாக 5 ஆயிரத்து 175 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று லிற்றோ நிறுவனம் அறிவித்தாலும், விலை அதிகரிப்புக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.

லிற்றோ நிறுவனத்தின் விலை பட்டியலின் அடிப்படையில் 2020  செப்டம்பர் 25 ஆம் திகதிகளவில் (12.5 KG )  சமையல் எரிவாயுவின் அதிகபட்ச சில்லறை விலை ஆயிரத்து 493 ரூபாவாக காணப்பட்டது.

5  KG லிற்றோ சமையல் எரிவாயுவின் அதிகூடிய சில்லறை விலையாக 598 ரூபாவும், 2.3 KG எரிவாயுவின் விலை  289 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2021 ஒக்டோபர் 10 ஆம் திகதி லிற்றோ சமையல் எரிவாயு விலை திடீரென அதிகரிக்கப்பட்டது.

12.5 KG சமையல் எரிவாயுவின் விலை  ஆயிரத்து 257 ரூபாவாலும்,  5 KG சமையல் எரிவாயுவின் விலை  503 ரூபாவாலும்,  2.3 KG சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி புதிய விலையாக 12.5 KG – 2,7505 KG  – 1,1012.3 KG  – 520  – நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12. 5 KG சமையல் எரிவாயுவின் விலையை 2 ஆயிரத்து 750 ரூபாவால் அதிகரிப்பதற்கு லிற்றோ நிறுவனம் தீர்மானத்திருந்தது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.

எனினும், விலை அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது.  பழைய விலையில்தான் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

சந்தையில் தற்போது சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. உலக சந்தையிலும் விலை உயர்வு என நிறுவனம் கூ கின்றது. எனவே , 2 ஆயிரத்து 500 ரூபாவால் இல்லாவிட்டாலும், விலை மறுசீரமைப்பு இடம்பெறுவது உறுதியென நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘லாப்’ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலை ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் புதிய அமைச்சரவை கடந்த 18 ஆம் திகதி பதவியேற்றது.

காஞ்சனா விஜேசேகர, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

புதிய அமைச்சரவை பதவியேற்று மறுநாளே சிபேட்கோவின் எரிபொருள் விலையும் அதிகரித்தது. மறுநாள், கோதுமைமா விலை அதிகரிப்பையடுத்து பாண் உட்பட பேக்கரி உணவு பொருட்களின் விலை எகிறியது.  தற்போது எரிவாயு விலையை அதிகரிப்பு என்ற அறிவிப்பை லிற்றோ நிறுவனம் விடுத்துள்ளது.

ஆர்.சனத்

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...