perayar
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடு முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி!

Share

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலையொட்டி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் இன்று காலை 8 45 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, பேராயரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் நடைபெற்றன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொண்ட விசேட பிரார்த்தனை நிகழ்வு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அருட்தந்தைகள், மகா சங்கத்தினர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பேராயரின் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...