Rajapaksa 2021.10.06 768x401 1 1
இலங்கைசெய்திகள்

போராட்டங்களை பொருட்படுத்தாத ராஜபக்சக்கள்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு பதவி விலக வேண்டுமென மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அந்த கோரிக்கையை ஏற்காது – அரசை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் புதிய அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (18) நியமித்துள்ளார்.

✍️ அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதியும், பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் அமைச்சரவையில் நீடிக்கின்றனர். ஏனைய மூன்று ராஜபக்சக்களும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி புதிய அமைச்சரவையில் பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எவ்வித பொறுப்பும் கையளிக்கப்படவில்லை.

✍️ இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்ட மொட்டு கட்சியின் 11 பேர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டுக்கும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

✍️ தினேஷ் குணவர்தன, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க , திலும் அமுனுகம ஆகியோரைதவிர, கடந்த அமைச்சரவையில் இருந்த எவரும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீடிக்கின்றனர். நீதி அமைச்சு பதவியும் சப்ரியிடம் கையளிக்கப்படலாம்.

✍️ காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்தன, சரத் வீரசேகர, டலஸ் அழகப்பெரும, பவித்ராதேவி வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பதவியேற்க விரும்பவில்லை. அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவும் இல்லை.

✍️ 30 நாட்கள் மட்டுமே அமைச்சரவையில் நீடித்த எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும் எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை. நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த சிவி ரத்னாயக்கவும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. நாமல் ராஜபக்ச வகித்த பதவியை ஏற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஜீவன் தொண்டமான் நிராகரித்துவிட்டார்.

✍️ ஒரு அமைச்சருக்கு , இரு விடயதானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சராக செயற்பட்ட ரிஷட் பத்திரனவின் மகனான, ரமேஷ் பத்திரனவுக்கு கல்வி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

✍️ அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. ஆளுங்கட்சியின் 5 இற்கும் மேற்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

✍️ அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் 30 பேர் கொண்ட அமைச்சரவையை ஜனாதிபதி அமைக்கலாம். எனினும், சுமார் 20 பேர்வரையே அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சர்கள் பட்டியல் விவரம்

✍️ தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சர்.
✍️ டக்ளஸ் தேவனாந்தா – கடற்றொழில் அமைச்சர்.
✍️ ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்.
✍️ பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.
✍️ திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்.
✍️ கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்.
✍️ விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சர்.
✍️ ஜனக வக்கும்புர- விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்துறை அமைச்சர்.
✍️ ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர்.
✍️ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல் அமைச்சர்.
✍️ விமலவீர திஸாநாயக்க – வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்.
✍️ காஞ்சனா விஜேசேகர – எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்.
✍️ தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
✍️ நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்.
✍️ சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்.
✍️ 16. நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர்
✍️ 17. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர்.

ஆர்.சனத்

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....