கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பரிதாப மரணம்!

Share

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரிப் பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பற்ற நிலையிலிருந்த கிணற்றில் விழுந்து சிறுவன் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறுவன் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...