கோட்டா மஹிந்த 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

15 பேருடன் புதிய அமைச்சரவை! – பஸில், நாமல், சமல், ஷசீந்திர ‘அவுட்’

Share

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எந்தவொரு அரச பதவியையும் வகிக்கக் கூடாது என்று நாடெங்கும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் பிரதானமாகக்கொண்ட 15 பேர் அடங்கிய அமைச்சரவையை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிச்சயமாகப் பங்குபெறுவார் என்று தெரியவருகின்றது.

15 பேரைக் கொண்ட அமைச்சரவையானது நாளை மாலை நியமிக்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.

எனினும், இந்த அமைச்சரவையில் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...

Untitled 41
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கு: பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,...

Untitled 40
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடிப் பேச்சு: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின்...

Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 4 பேருக்கு மரண தண்டனை!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று தனித்தனி கொலை வழக்குகளின் தீர்ப்பை இன்று...