கீவ் நகரில் 900 பேரின் உடல்கள்
உலகம்செய்திகள்

கீவ் நகரில் மக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்பு!

Share

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு உக்ரைன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 900 இற்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கீவ் பிராந்திய பொலிஸ் படைத் தலைவர் ஆன்ட்ரிய் நெபிடோவ் தெரிவித்துள்ளார்.

வீதிகளிலும், தற்காலிக புதைகுழிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த உடல்களில், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் மக்களை வீதிகளில் நிற்க வைத்து ரஷ்ய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புச்சா நகரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவிலும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...