Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
இலங்கைசெய்திகள்

தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி! – சட்டமூலம் நிறைவேற்றம்

Share

கடும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (07.04.2022) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருடாந்தம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரேதடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது மிகைவரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டது. எதிரணிகள் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பில் இருந்து தமது கட்சி விலகி நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட முக்கிய நிதியங்கள் இதில் உள்ளக்கடப்படவில்லை. அதற்காகவே நாம் போராடினோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதன்பின்னர் குழுநிலையின்போது திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. திருத்தங்கள் சகிதம் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இன்றைய தினம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவில்லை. பிரிதொரு நாளில் நடத்தப்படவுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...