தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை உச்சம்!
அரசியல்இந்தியாசெய்திகள்

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை உச்சம்! – தி.மு.க. அரசை சாடுகின்றார் எடப்பாடி

Share

“தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை.”

– இவ்வாறு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்ட அ.தி.மு.க. புறநகர் அலுவலகத்தில் அ.தி.மு.க. உள்கட்சித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுபாய் சென்றபோது அவருடன் துறை செயலாளர்கள் செல்லவில்லை, துறை அமைச்சர்கள் செல்லவில்லை. மு.க.ஸ்டாலின் குடும்பமே டுபாய்க்கு சென்றுள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க அவர் அங்கு செல்லவில்லை, டுபாய்க்குச் சென்றது அவருடைய தனிப்பட்ட காரணத்துக்காக தான் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக புதிய தொழில் தொடங்குவதற்காக அங்கு சென்றுள்ளனர் என்று மக்கள் பேசிக்கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது.

நான் வெளிநாடு சென்றபோது சாதாரண விமானத்தில்தான் பயணம் செய்தேன். என்னுடன் அந்தந்த துறைகளுடைய அமைச்சர்கள், செயலாளர்கள் வந்தார்கள்.

இதை அமைச்சர்கள் சுற்றுலா என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். வேண்டும் என்றே திட்டமிட்டு எங்கள் மீது அவதூறு பரப்பினார்.

நாங்கள் உண்மையிலேயே பல திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்றோம்.

நாங்கள் அரச பணத்தை வீணடிக்கவில்லை. ஆகவே, இவர்கள் குடும்ப சுற்றுலா போவதற்காக டுபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைக்கும் போர்வையில் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதன்மை மாநிலம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகரித்து விட்டது” – என்றார்.

#IndianNews #tamilnaduNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...