ஹக்கீம் ரிஷாத்
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவின் மாநாட்டைக் ஹக்கீம், ரிஷாத் கட்சிகளும் புறக்கணிப்பு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துள்ளது.

நேற்றிரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாகவே இந்த உயர்பீட கூட்டம் இடம்பெற்றது எனக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசுக்குச் சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த போதும் இந்த அரசு இது தொடர்பில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு தன்னுடைய பிரச்சினைகளை இந்தச் சந்தர்ப்பத்தில் மூடிமறைத்துக்கொள்வதற்காகவே இந்தச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு முனைந்திருப்பது தொடர்பிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி கலந்துகொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 215
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு: குற்றப் பிரமுகரின் சகோதரர் உயிர் தப்பினார்!

அஹுங்கல்லா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘லோக்கு பட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பட்டி’...

world 217
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்புவோருக்காக விசேட இரயில் சேவைகள் அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தனது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்...