ஹிருணிகா
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்ப அரசு நாட்டுக்கே சாபக்கேடு! – போட்டுத் தாக்குகின்றார் ஹிருணிகா

Share

“குடும்ப ஆட்சி நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம் ஆகும். – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய அரசு எவரின் ஆலோசனையையும் செவிமடுப்பதில்லை; தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்கின்றது.

மின்சாரக் கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுக்கமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சிறந்த பொருளாதார அறிவுள்ளது.

தற்போதைய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தன்னிச்சையாகச் செயற்படுகின்றார். இந்தியாவிடமிருந்து பெற்ற கடனைச் செலவு செய்த பின்னர் அவர் கடன் பெறுவதற்காக வேறு ஒரு நாட்டுக்குச் செல்வார்.

ஜனாதிபதியாலோ, பிரதமராலோ பஸில் ராஜபக்சவின் நடவடிக்கைளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ராஜபக்சகளின் குடும்ப ஆட்சியில் பஸிலின் கை மேலோங்கியுள்ளது. குடும்ப ஆட்சி நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம் ஆகும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...