நாடாளுமன்றில்
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் செலவுகளைக் குறைக்க ஆலோசனை!

Share

நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் பாவனையை 50 வீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்ற பிரதானிகளுக்கு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கும் குடிதண்ணீருக்கும் வருடாந்தம் 8 கோடி ரூபா செலவிடப்படுகின்றது.

இந்நிலையில், மேற்படி உத்தரவின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் பாவனையைக் கட்டுப்படுத்த ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னாலுள்ள நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த பொறிமுறை மின்சாரப் பாவனையைக் குறைக்கும் முகமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அழகு சேர்க்கும் வகையில் நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதற்காக நான்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் பாவிக்கப்பட்டன இதை நிறுத்துவதால் 75 மெகா வோட் மின்சாரம் சேமிக்கப்படுகின்றது எனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் சி.எப்.எல். மின்குமிழ்களுக்குப் பதிலாக எல்.ஈ.டி. மின்குமிழ்கள் பாவிக்கப்படுகின்றன எனவும் பொறியியலாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...